திராவிட கருத்துகளை நிலைநிறுத்தவே ஆட்சியில் உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

திராவிட கருத்துகளை நிலைநிறுத்தவே திமுக ஆட்சியில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

திராவிட கருத்துகளை நிலைநிறுத்தவே திமுக ஆட்சியில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

சென்னையில் விசி.க. தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் பேசியதாவது: 

திராவிட மாடல் முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் என உறுதியளிக்கிறேன். திராவிட கருத்துகளை நிலைநிறுத்தத்தான் திமுக ஆட்சியில் உள்ளோம். எந்த சூழலிலும் திமுகவின் கொள்கைகளை நான் விட்டுத் தரமாட்டேன். தேர்தல் வரும் போகும் ஆனால் இயக்கங்களும் , கொள்கைகளும் இருக்கும். 

பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்து கொள்ளாது; டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல. கலைஞர் பிள்ளை நான். மத்திய அரசு - மாநில அரசு உறவு மட்டுமே இங்கே உள்ளது. திமுகவுக்கும் பாஜகவும் எந்த உறவும் இல்லை. இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான். நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக இதை கூறுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com