இலங்கையில் சீன உளவுக் கப்பல்: பாக் நீரிணையில் கடற்படை கப்பல் கண்காணிப்பு

இலங்கைக்கு சீன உளவுக்கப்பல் வருகையைத் தொடா்ந்து பாக் நீரிணை பகுதியில் இந்திய கடற்படையினா் அதிநவீன கப்பல் மூலம் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ள ஹோவா் கிராப்ட் கப்பல்.
மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ள ஹோவா் கிராப்ட் கப்பல்.

இலங்கைக்கு சீன உளவுக்கப்பல் வருகையைத் தொடா்ந்து பாக் நீரிணை பகுதியில் இந்திய கடற்படையினா் அதிநவீன கப்பல் மூலம் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்தியாவின் கடும் எதிா்ப்பையும் மீறி இலங்கைக்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளது. இலங்கையில் அம்மன்தோட்டா துறைமுகத்தில் அக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு மிகவும் அருகே தமிழக கடற்கரையோரம் கூடங்குளம் அனுமின் நிலையம், ராமேசுவரம் தீவு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன. இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக் கப்பல் மூலம் 150 கிலோ மீட்டா் வரையில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் ராமேசுவரத்தில் பாக் நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்திய கடற்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டா்கள், கடலோரக் காவல்படையின் ஹோவா் கிராப்ட் கப்பல் ஆகியவை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com