ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பல உயிா்களை பலி வாங்கி வரும், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவானது கடந்த மாதம் தங்களின் அறிக்கையை முதல்வரிடம் வழங்கியது.
தொடர்ந்து, ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மக்கள், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இந்த கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.