சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் தொடர்பான டெண்டர் நடைமுறை தொடரலாம். ஆனால் டெண்டர் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
ஏற்கனவே உரிமம் பெற்று பார் நடத்துவோரின் இடத்தை வழங்க நிர்பந்திக்கக் கூடாது என உரிமைதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்திரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 30-க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.