தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார்.
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சென்னை கோபாலபுரம் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அங்கு முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வியை சந்தித்து பேசியதுடன் அவரது தாயார் தயாளு அம்மாளையும் கோபாலபுரம் வீட்டில் நேரில் சந்தித்துப் பேசி உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழிசை சௌந்தராஜன், 'கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி தமிழ்ச்செல்வியை சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன்.
இதற்கு முன்பு, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் இதே இல்லத்திற்கு வந்த நினைவு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தயாளு அம்மாளை சந்தித்த புகைப்படங்களையும், பிரதமர் மோடியுடன் கருணாநிதியைப் பார்க்க வந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.