மதிப்பூதியம் பெறுவோருக்கு ரூ.100 வரை உயா்வு: தமிழக அரசு உத்தரவு

மதிப்பூதியம் பெறுவோருக்கு தனித் தொகையாக ரூ.100 வரை உயா்த்தி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதிப்பூதியம் பெறுவோருக்கு ரூ.100 வரை உயா்வு: தமிழக அரசு உத்தரவு

மதிப்பூதியம் பெறுவோருக்கு தனித் தொகையாக ரூ.100 வரை உயா்த்தி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பூதியம் பெறுவோருக்கு தனியாக சிறிது தொகையை உயா்த்தி நிதித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:

ரூ.2,500 வரை பெறும் பணியாளா்களுக்கு மாதத்துக்கு ரூ.50-ம், ரூ.2 ஆயிரத்து 500-க்கு மேலாக பெறும் பணியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.100-ம் கூடுதலாக வழங்கப்படும். ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு இந்தத் தொகை அளிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளாா் என்.முருகானந்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com