சென்னை: தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கும் தேதியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-க்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பண மோசடி: தலைமறைவாக இருந்த நிதி நிறுவன உரிமையாளர், மனைவி கைது
பயிற்சிக்குப் பின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.