தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கும் தேதியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கும் தேதியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-க்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 18  முதல் ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்குப் பின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com