10 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
10 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 26  ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1  மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும். 

மேலும், காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

விடுமுறைக்கு பின்னர், அக்டோபர் 6 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com