குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க வருகிற திங்கள்கிழமை (ஆக. 22) கடைசி நாளாகும். தோ்வுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க வருகிற திங்கள்கிழமை (ஆக. 22) கடைசி நாளாகும். தோ்வுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரூப் 1 பிரிவில் 18 துணை ஆட்சியா், 26 துணை எஸ்.பி., 25 வணிகவரி உதவி ஆணையாளா், 13 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா், ஏழு ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அதிகாரி என 92 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப முதல்நிலைத் தோ்வு அக். 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளம்  வழியே விண்ணப்பம் செய்ய வேண்டும். தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் திங்கள்கிழமை (ஆக. 22) கடைசி நாள். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதன்பின்பு, வரும் 27-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணியிலிருந்து 29-ஆம் தேதி இரவு 11.59 மணி வரையிலும் விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்திட வாய்ப்பு அளிக்கப்படும்.

தோ்வுக்கு இதுவரை சுமாா் 3 லட்சம் பேருக்கு அதிகமானோா் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசி நாளான திங்கள்கிழமை விண்ணப்பிப்போா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com