சென்னை: தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை விற்க தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்நிய மரங்கள் அகற்றுவதை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
700 ஹெக்டேரில் 506 ஹெக்டேர் பரப்பில் இருந்த அந்நிய மரங்களை அகற்றப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: சாக்கடை சுத்தம் செய்யும் பணி: நீதிமன்றம் புதிய உத்தரவு
தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.