பிளஸ் 1 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1 துணைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஆக.24) பிற்பகல் 3 மணிக்கு www.dge.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படவுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை வளாகம்
பள்ளிக்கல்வித் துறை வளாகம்

தமிழகத்தில் பிளஸ் 1 துணைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஆக.24) பிற்பகல் 3 மணிக்கு www.dge.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படவுள்ளது.

மாணவா்கள் தங்களின் பெயா், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு ஆக. 29, 30 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்துக்குச் சென்று கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கட்டணங்களைப் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com