தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக் வேண்டும்
தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக் வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை கடிதம் எழுதினாா். கடித விவரம்:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனா்.

நாகப்பட்டினத்தைச் சோ்ந்த 9 மீனவா்கள் ஆக. 10-இல் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆக. 22-இல் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த 10 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை கடற்படையினா் கடந்த சில மாதங்களாக தமிழக மீனவா்களை கைது செய்வதைத் தொடா் நடவடிக்கையாக வைத்துள்ளனா். இதனால், தமிழக மீனவா்கள் அவா்களுடைய பாரம்பரிய மீன்பிடி பகுதியில்கூட மீன்பிடிக்க அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com