கருணாநிதி மனைவி ராஜாத்தி அம்மாள் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமானவர் ராஜாத்தி அம்மாள். இவர் கடந்த சில மாதங்களாக செரிமானக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
இதையும் படிக்க- போதைப் பொருளுக்கு அடிமையாகும் மாணவிகள்: முதல்வர் ஸ்டாலின் கவலை
இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அண்மை நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ராஜாத்தி அம்மாள் உயர் சிகிச்சை பெறுவதற்காக இன்று ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவருடன் கனிமொழி எம்பி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். ராஜாத்தி அம்மாள் ஜெர்மனியில் 2 வாரங்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று மீண்டும் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.