திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுப் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த யுகேஜி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளித் தாளாளர் காமராஜ் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே காமராஜின் மனைவி பிரபாவதி தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் படித்த வந்த யுகேஜி சிறுமியை, பிரபாவதியின் கணவர் காமராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரையடுத்து, காமராஜைப் பிடிக்க காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், தூத்தக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமராஜ் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.