கொடைக்கானலில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், பழனி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பருவ நிலை மாற்றம் காரணமாக கொடைக்கானலில் வழக்கத்திற்கு மாறாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கொடைக்கானல் மற்றும் வில்பட்டி, பெருமாள்மலை, பிரகாசபுரம், பெரும்பள்ளம், வட்டக்கானல், மச்சூா், மயிலாடும் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழையால் மின்தடை ஏற்பட்டது.
மேலும், கொடைக்கானல் - பழனி பிரதான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.