மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு

'மாண்டஸ்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

'மாண்டஸ்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ஆம் தேதி தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 10ஆம் தேதி புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடந்தது. புயல் காரணமாக தொடர் மழை பெய்ததால், டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. 

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. தற்போது அண்ணா பல்கலைக் கழகம் புயலா, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது. 

அந்தவகையில், டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ஆம் தேதி தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com