'மாண்டஸ்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ஆம் தேதி தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 10ஆம் தேதி புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடந்தது. புயல் காரணமாக தொடர் மழை பெய்ததால், டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. தற்போது அண்ணா பல்கலைக் கழகம் புயலா, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது.
அந்தவகையில், டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ஆம் தேதி தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.