சங்ககிரி: கியோ கோஷின் கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சங்ககிரி கிளையைச் சேர்ந்த மாணவர்களுக்கு கருப்பு பெல்ட், சான்றிதழ்கள் வழங்கும் விழா சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கியோ கோஷின் கராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் சங்ககிரி கிளையின் சார்பில் பி.கனகராஜ், எ.சதீஸ்குமார் ஆகியோர் பங்கேற்று கருப்பு பெல்ட் பெற்றனர்.
வெற்றி பெற்ற இரு மாணவர்களுக்கும் சங்ககிரி கியோ கோஷின் கராத்தே அமைப்பின் தலைமை பயிற்சியாளர் கே.அர்ச்சுணன் கருப்பு பெல்ட், சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
கொங்கணாபுரம் தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் கே.ரவிசங்கர், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.