அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 சடலங்கள் மீட்பு!

சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 ஆண் சடலங்களை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். 
அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 சடலங்கள் மீட்பு!


சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில்வே போலீசார் மீட்டனர். 

இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டனர். 

மீட்கப்பட்ட 3 ஆண் சடலங்களில் 25 வயது  மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 50 வயது மதிக்கத்தக்க ஆண் இரண்டு பேர் எனவும், இவர்களை அடையாளம் காணும் பணியில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

மீட்கப்பட்ட சடலம் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com