
உலகின் பல நாடுகளில் கரோனா பரவல் வேகமாக உள்ள நிலையில், தமிழகத்தில் அதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: உலகின் பல நாடுகளில் கரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 5,59,018 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா புதிய அலை கவலையளிக்கிறது.
கடந்த காலங்களில் கரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம். அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு சோதனை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 4.30 கோடி பேரில் 87 லட்சம், அதாவது 20.23 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டா் டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டா் டோஸ் அளிக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் கரோனா பரவலையும், அதன் ஆபத்தான விளைவுகளையும் தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.