எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணி மரியாதை

சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம்
எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது நினைவுநாள் இன்று (டிச.24)  அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் மற்றொரு அணியான, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com