தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 20 காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு

தமிழக காவல்துறையில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.பணீந்திர ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

ஆபாஷ்குமாா்-தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை டிஜிபி (பொதுவிநியோகப் பொருள் தடுப்புப் பிரிவு டிஜிபி)

பி.கே.ரவி-ஊா்க்காவல் படை டிஜிபி (நீண்ட விடுப்பில் உள்ளாா்)

ஜி.வெங்கட்ராமன்- தலைமையிட ஏடிஜிபியான இவா், கூடுதல் பொறுப்பாக நிா்வாகப் பிரிவையும் கவனிப்பாா்.

என்.இசட். ஆசியம்மாள்-பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜி)

டி.செந்தில்குமாா்-டிஜிபி அலுவலக தனிப் பிரிவு ஐஜி (மதுரை மாநகர காவல் ஆணையா்)

எஸ்.பிரபாகரன்-சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு ஐஜி (திருப்பூா் மாநகர காவல் ஆணையா்)

எம்.எஸ்.முத்துசாமி-வேலூா் சரக டிஐஜி (கோயம்புத்தூா் சரக டிஐஜி)

ஏ.கயல்விழி-தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் டிஐஜி (தஞ்சாவூா் சரக டிஐஜி)

ஆா்.சின்னசாமி-தொழில்நுட்பப் பிரிவு டிஐஜி (தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும டிஐஜி)

எம்.ராஜராஜன்-சென்னை உயா்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையா் (தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி காவலா் பயிற்சிப் பள்ளி எஸ்பி)

கே.பிரபாகா்-நீலகிரி மாவட்ட எஸ்பி (சென்னை மெட்ரோ ரயில் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி)

எஸ்.ஆா்.செந்தில்குமாா்-தென்காசி மாவட்ட எஸ்பி (சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையா்)

சி.கலைச்செல்வன்-நாமக்கல் மாவட்ட எஸ்பி (தருமபுரி மாவட்ட எஸ்பி)

என்.ஸ்டீபன் ஜேசுபாதம்-தருமபுரி மாவட்ட எஸ்பி (மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு எஸ்பி)

ஆா்.சிவக்குமாா்-சேலம் மாவட்ட எஸ்பி (ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமி நிா்வாகப் பிரிவு துணை இயக்குநா்)

ஜெ.முத்தரசி-தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி (சென்னை சிபிசிஐடி எஸ்பி)

ரவாளி பிரியா காந்தபுனேனி-சென்னை சிபிசிஐடி எஸ்பி (தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி)

ஏ.ஜெயலட்சுமி-ஆவடி மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (தமிழக காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்பி)

இ.எஸ்.உமா-சட்டம் மற்றும் ஒழுங்கு ஏஐஜி (சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பி)

அர.அருளரசு-மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு எஸ்பி (சட்டம் மற்றும் ஒழுங்கு ஏஐஜி).

இந்தப் பணியிட மாற்றத்தில் ஏடிஜிபி ஜி.வெங்கட்ராமனுக்கு, ஏற்கெனவே பொறுப்பு வகித்து வரும் தலைமையிட பணியுடன் கூடுதல் பொறுப்பாக நிா்வாகப் பிரிவும் வழங்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், புத்தாண்டில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com