பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, மதுரையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. தொண்டர்கள் மூலம்தான் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இடையில் பல்வேறு பிரச்னைகளை செயற்கையாக உருவாக்கினார்கள் என்றார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, மதுரையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று குஜராத் புறப்பட்டார்.