நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரேகட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது, பிரச்சாரம் என தீவிரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
மாநிலத் தேர்தல் ஆணையமும் தங்கள் தரப்பிலான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்கீடு செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.