சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும். சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது.
மக்கள் நலன் சார்ந்த மாணவர் நலனுக்காக சட்டப்பேரவை சிறப்புக்கு கூட்டம் நடத்தப்படுகறிது. இவ்வாறு அவர் கூறினார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து சிறப்புக் கூட்டம் வரும் செவ்வாய்கிழமை கூடுகிறது.
இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 8ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு, சென்னை தலைமைச்செயலத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.