நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் காவல் நிலையங்களில் வரும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்தல், குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு, காவல்துறையை நவீனப்படுத்துதல், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.