வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கனமழை: உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணி பாதிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இரண்டாவது நாளாக இன்றும் ( பிப்.11) தொடர் கனமழை பெய்து வருகிறது.
வேதாரண்யம் பகுதி சம்பா நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோலை பாதிக்கும் அளவில் தேங்கி நிற்கும் மழை நீர்
வேதாரண்யம் பகுதி சம்பா நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோலை பாதிக்கும் அளவில் தேங்கி நிற்கும் மழை நீர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் இரண்டாவது நாளாக இன்றும் ( பிப்.11) தொடர் கனமழை பெய்து வருகிறது.

காற்று சுழற்சி காரணமாக கடலோரப் பகுதியில் மழைப் பொழிவு இருப்பதால் உப்பு உற்பத்தி, நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் ஏற்பட்ட மழைப் பொழிவு வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 69.6 மி.மீ, தலைஞாயிறு 23.2 மி.மீ,  கோடியக்கரையில் 80 மி.மீ மழை பதிவானது.

வேதாரண்யம் பகுதியில் கனமழை தொடர்வதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com