வாணியம்பாடி: வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 79,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி நகராட்சி தோ்தல் பறக்கும் படை அலுவலா் சித்ரா தலைமையிலான குழுவினா் பெரியப்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கந்திலியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவரிடம் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ரூ. 79,500 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.