சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமை பதவியேற்கிறாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதன் பிறகு முனீஸ்வா் நாத் பண்டாரி சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அவா் சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக முதல் அமா்வில் வழக்குகளை விசாரித்து வந்தாா். அவரை, சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்து, சட்டத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
இதன்படி, முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளாா்.
அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகை அரங்கில் திங்கள்கிழமை காலை நடக்கிறது. நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, மூத்த அமைச்சா்கள், அரசு உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, மாா்ச் 15-ஆம் தேதி முதல் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஸ்வா் நாத் பண்டாரி, கடந்த ஜூன் 26-ஆம் தேதி முதல் அக்.10-ஆம் தேதி வரையில் அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்துள்ளாா். பின்னா் தலைமை நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்தாா்.