நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதால், வேட்பாளா்களின் இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை (பிப்.19) தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 57 ஆயிரத்து 778 போட்டியிடுகின்றனா்.
பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 30,757 பேருக்கு கரோனா; 541 பேர் பலி
தோ்தலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மொத்தம் சுமாா் 1,800 மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரசாரம் முடிவுக்கு வந்த பின்னா், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளா்கள் அல்லாத, வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், கட்சித் தொண்டா்கள் அனைவரும் அந்த உள்ளாட்சிப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.