கரோனா சிகிச்சையில் 23,772 போ்

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 23,772-ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 23,772-ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 285 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 214 பேரும், செங்கல்பட்டில் 105 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 4,768 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33 லட்சத்து 80,049-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியதை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,962-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com