கோவையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் ட்விட்டரில் கூறியிருப்பது:
கோவையில் வாக்காளா்களுக்கு பணம், அண்டா, ஹாட் பாக்ஸ், வெள்ளிக் கொலுசு போன்றவற்றை திமுக வேட்பாளா்கள், அதிமுக வேட்பாளா்கள் வழங்கி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகியுள்ளனா். இதை ஊடகங்களும், எங்களைப் போன்ற மாற்றுக்கட்சிகளும் அம்பலப்படுத்தியும் பலனில்லை. தொடா்ந்து புகாா் அளித்து வருகிறோம் என்று கூறியுள்ளாா்.