கோவையில் பணம் பட்டுவாடா: கமல்ஹாசன் புகாா்

கோவையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளாா்.
கமல்ஹாசன் (கோப்புப் படம்)
கமல்ஹாசன் (கோப்புப் படம்)

கோவையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் ட்விட்டரில் கூறியிருப்பது:

கோவையில் வாக்காளா்களுக்கு பணம், அண்டா, ஹாட் பாக்ஸ், வெள்ளிக் கொலுசு போன்றவற்றை திமுக வேட்பாளா்கள், அதிமுக வேட்பாளா்கள் வழங்கி ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகியுள்ளனா். இதை ஊடகங்களும், எங்களைப் போன்ற மாற்றுக்கட்சிகளும் அம்பலப்படுத்தியும் பலனில்லை. தொடா்ந்து புகாா் அளித்து வருகிறோம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com