பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரறிவாளன் (கோப்புப் படம்)
பேரறிவாளன் (கோப்புப் படம்)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். இதனால் சிகிச்சைக்காக அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்ட பரோல் காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு 10ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளனின் உடல் நிலை மற்றும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் 2021 மே 18 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com