‘ஒற்றை மொழி ஆதிக்கமின்றி சமமான இந்தியாவை காண உறுதியேற்போம்’: முதல்வர் ஸ்டாலின்

ஒற்றை மொழி ஆதிக்கமின்றி சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒற்றை மொழி ஆதிக்கமின்றி சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

சர்வதேச தாய்மொழி நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com