தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 50 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக 6, பிற 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 35 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 33 வார்டுகளை திமுக வென்றுள்ளது. அதிமுக, அமமுக தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com