தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்..உடனுக்குடன்
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 50 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக 6, பிற 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 35 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 33 வார்டுகளை திமுக வென்றுள்ளது. அதிமுக, அமமுக தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.