நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்று, இப்பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு, அதிமுக, மதிமுக தலா 2 வார்டுகளில் வென்றுள்ளன. 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.