நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 வார்டுகளைக் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்று, இப்பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு திமுக 7 வார்டுகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.