மானாமதுரை: தஞ்சாக்கூரில் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா தொடங்கியது

ஸ்ரீ ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி கோயிலில் சிவராத்திரி மற்றும் தென் மாவட்டங்களில் முதல்முறையாக இங்கு தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு குடமுழுக்கு விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 
மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூரில் தென் மாவட்டங்களிலேயே முதல்முறையாக தவக் கோலத்தில் வடிவமைத்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவன் சிலை.
மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூரில் தென் மாவட்டங்களிலேயே முதல்முறையாக தவக் கோலத்தில் வடிவமைத்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவன் சிலை.

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி கோயிலில் சிவராத்திரி மற்றும் தென் மாவட்டங்களில் முதல்முறையாக இங்கு தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு குடமுழுக்கு விழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 

தஞ்சாக்கூரில் ஒரே இடத்தில் ஸ்ரீ ஜெகதீஸ்வரர், ஸ்ரீ ஜெயம் பெருமாள், 18 சித்தர்களுடன் கூடிய ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்ரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் ராகு, கேது பகவானுக்கு தனி சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேற்கண்ட கோயில்களுக்கு அடுத்தடுத்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. தற்போது சுப்பிரமணியர் கோயிலில் தென் மாவட்டங்களிலேயே முதலாவதாக தவக்கோலத்தில் சிவன் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஜெகதீஸ்வரர் திரிபுரசுந்தரி  கோயிலில் முதலாம் ஆண்டு மாசி சிவராத்திரி விழாவும், தவக்கால சிவனுக்கு குடமுழுக்கு விழாவும் தொடங்கியுள்ளது. 

விழாவின் தொடக்கமாக ஜெகதீஸ்வரர் கோயிலிலும் சுப்பிரமணியர் கோயிலிலும்  காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சுப்பிரமணியருக்கும் சிவனுக்கும் ஜெகதீஸ்வரர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 1 ஆம் தேதி ஜெகதீஸ்வர் சுவாமிக்கும் 108 வகையான அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

அதன்பின்னர் தவக்கோலம் சிவனுக்கு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. சிவன் ராத்திரி விழா நாள்களில் தினமும் ஜெகதீஸ்வரர் சுவாமிக்கும் சுப்பிரமணியர் சுவாமிக்கும் சிவனுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. 
தென் மாவட்டங்களிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள தவக்கோல சிவனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தஞ்சாக்கூருக்கு வருகை தருகின்றனர். 

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான கே.எ.பால சுப்பிரமணியசாமி செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com