நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.