திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் பிப்.28இல் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக பிரமுகர் கள்ள ஓட்டு செலுத்தியதாகக் கூறி அவரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக ஆளும் திமுக அரசைக் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயக்குமாரின் கைதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் பிப்ரவரி 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.