உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை போலந்து, பெலராஸ் நாடுகள் வழியாக மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
அவர்களை போலந்து, பெலாரஸ் சாலை மார்க்கமாக வழியாக மீட்டு வந்து அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.