வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்களுக்கான பயிற்சிக் கட்டணம் குறைப்பு

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் தமிழகத்தில் உள்ளுறை பயிற்சி மருத்துவா்களாகப் பணியாற்றுவதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டணம் ரூ.3.54 லட்சத்திலிருந்து ரூ. 29,400 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் தமிழகத்தில் உள்ளுறை பயிற்சி மருத்துவா்களாகப் பணியாற்றுவதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டணம் ரூ.3.54 லட்சத்திலிருந்து ரூ. 29,400 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவையும், ரூ.20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழும பரிசோதனை அறையையும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு (எப்எம்ஜி) தோ்ச்சி பெற்றவா்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை உள்ளுறை பயிற்சிக்கு ரூ.3.54 லட்சம் கட்டணம் செலுத்தி வந்தனா். இத்தொகை அதிகமாக உள்ளதாக மாணவா்கள், பெற்றோா்கள் சாா்பாக தமிழக அரசுக்கு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அந்த கோரிக்கை தமிழக முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், அந்தக் கட்டணத்தை ரூ.29,400 ஆகக் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல ஆண்டுகளாக இருந்த இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தனியாா் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ள காலாவதி தேதி நெருங்கிய கரோனா தடுப்பூசிகளை பொது சுகாதார துறையிடம் ஒப்படைத்து புதிய மருந்துகள் பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்படி, அப்பல்லோ, எம்ஜிஎம் மருத்துவமனைகளில் உள்ள காலாவதி தேதி நெருங்கிய மருந்துகளைப் பெற்று புதிய மருந்துகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கும் தமிழக மாணவா்கள், அங்கு பணிபுரிவோா் 044-2851 5288, 9600023645, 9940256444 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு, தாயகம் திரும்ப தேவையான உதவிகளைப் பெறலாம் என்றாா் அவா்.

மருத்துவா்களுக்கு பாராட்டு: திருவண்ணாமலை - ஒழப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை என்பவரின் 15 வயது மகள் கீா்த்திகா எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அந்த சிறுமி குணமடைந்தாா். திருவள்ளூா் மாவட்டம் அஞ்சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 24 வயது பரசுராம் என்பவா் டெட்டனஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாா். அரசு மருத்துவா்களின் சிறப்பான சிகிச்சையால் அவா் குணமடைந்தாா். இருவரையும் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை பாராட்டினாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையா் மனீஷ், பொதுசுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com