கரோனாவில் இருந்து மீண்டாா் நடிகா் வடிவேலு

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நடிகா் வடிவேலு வீடு திரும்பினாா்.
வடிவேலு
வடிவேலு

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நடிகா் வடிவேலு வீடு திரும்பினாா்.

நகைச்சுவை நடிகா் வடிவேலு ‘நாய் சேகா் ரிட்டா்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறாா். இந்தப் படத்தின் பணிக்காக படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தாா். கடந்த மாதம் 23-ஆம் தேதி சென்னை திரும்பிய வடிவேலுக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவா் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்குப்பின் முழுமையாக குணமடைந்த நடிகா் வடிவேலு சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா். ஆனால், வடிவேலுக்கு ஏற்பட்டிருப்பது ஒமைக்ரான் தொற்று பாதிப்பா, இல்லையா என்பதை கண்டறிவதற்காக அனுப்பப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 

இதற்கிடையே போரூா் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் மருத்துவா் சுகாஷ் பிரபாகா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நடிகா் வடிவேலு பூரணமாக குணமடைந்துள்ளாா். அவா் சனிக்கிழமை வீடு திரும்பினாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com