முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 5-1-2022 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.
இதையும் படிக்க- 17வது கரோனா தடுப்பூசி முகாம்: 15.16 லட்சம் பேர் பயன்
அதுபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.