மாமல்லபுரத்திலிருந்து 16.8 அடி அஷ்டநாக கல் கருடர் வாலாஜாபேட்டைக்கு பவனி

மாமல்லபுரத்திலிருந்து 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர், ஜனவரி 5ல் புறப்பட்டு வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி பீடம் வந்தடைகிறது என யாத்திரைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மாமல்லபுரத்திலில் வடிவமைக்கப்பட்ட  16.8 அடி உயர அஷ்டநாக கல் கருடர்
மாமல்லபுரத்திலில் வடிவமைக்கப்பட்ட 16.8 அடி உயர அஷ்டநாக கல் கருடர்

மாமல்லபுரத்திலிருந்து 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர், ஜனவரி 5ல் புறப்பட்டு வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி பீடம் வந்தடைகிறது என யாத்திரைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை என்னும் கிராமத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் எனும் 6 மதங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவலிங்க ரூபமாக 468 சித்தர்களும் அமைந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அமைந்து அருள்பாளித்து பூலோக வைகுண்டமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 88வது திருச்சன்னதியாக 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் அமையவுள்ளார்.

16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவான் மாமல்லபுரம் பிரகாஷ் சிற்பக்கலைக் கூடத்தில்  லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட மூலவர் விக்கிரகம் ஜனவரி 5ஆம் தேதி மாமல்லபுரத்திலிருந்து கரிக்கோல யாத்திரையாக வாலாஜா தன்வந்திரி பீடத்தை சென்றடைகிறது.

தன்வந்திரி பீடத்தில் 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடன் அமையவிருக்கும் ஆலயத்தின் சிறப்பு

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை என்னும் கிராமத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் எனும் 6 மதங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவலிங்க ரூபமாக 468 சித்தர்களும் அமைந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அமைந்து அருள்பாளித்து பூலோக வைகுண்டமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 88வது திருச்சன்னதியாக 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர் அமையவுள்ளார்.

‘ஓம் ஸ்ரீ தன்வந்திரி கருடாய நமஹ’ என்ற சக்திமிக்க மந்திரத்தை பக்தர்கள் கைப்பட எழுதிய கோடிக்கணக்கான மந்திரங்களைக் கொண்டு அமையவுள்ள பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவானுக்கு பாரத தேசத்தில் மிகப்பெரிய ஆலயமாக முதல் முதலில் அமையவுள்ளது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கையிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் (ஒற்றைக் கல்லால் ஆனது) பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யவுள்ளார். 

கருட பகவானின் சிறப்புகள்

பட்சி ராஜாவாக விளங்கும் கருட பகவான் திருமாலின் வாகனமாக விளங்குகிறார். இவர் காசியபர் – கத்ரு தம்பதியினருக்கு மகனாவார். அமிர்தத்தை தேவலோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும். விஷ்ணுவின் வாகனமாவதால் இவரை ‘பெரிய திருவடி’ என்றும் ஆஞ்சநேயரை ‘சிறிய திருவடி’ என்றும் கூறுவர். வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும் கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேஷனை இடது கால் நகத்திலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும் அணிந்திருப்பவர் கருடன். இவரை தரிசித்து கீழ்கண்ட பலன்களை பெற்று சிறப்பாக வாழ பிரார்த்திக்கின்றோம்.

கருட பகவனை தரிசிப்பதால் விலகும் தோஷங்கள்

சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத்தடை, புத்திரத்தடை, பூமிதோஷம், வாகனத்தடை, கல்வித்தடை, உத்தியோகத்தடை, ஏழரை சனி தோஷங்கள், வெளிநாடு செல்லும் தடைகள் மற்றும் குடும்பத்தடைகள் மேலும் வாகன விபத்து, கண்டங்கள், தோல் வியாதிகள் போன்ற பல்வேறு விதமான தடைகள் விலகும். விஷ்ணுவின் அருள் கிடைத்து நற்கதி அடையலாம். தீராத நோய்கள் மற்றும் பார்வை கோளாறுகள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவும் பெறலாம். தைரியம் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அனைவரும் அழிவர். எதிரியற்ற நிலை உருவாகும். கூர்மையான அறிவு, கூர்மையான புத்தி, கூர்மையான பார்வை கிடைத்து ஆயுள் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். பண வரவு அதிகரிக்கும். மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கையிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com