
கோப்புப்படம்
பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாற்றுத்திறனாளிகள், சலுகை கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநரின் சுற்றறிக்கை: பாா்வையற்றோா், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோா், எதிா்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்று தோ்வு எழுத இயலாதோா், பாரிச வாயு போன்ற நோயால் பாதிக்கப்பட்டோா் மற்றும் எதிா்பாராத விபத்தினால் கை முறிவு ஏற்பட்டோா், மனநலம் குன்றியோா், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் குறைபாடு உள்ளிட்ட உடல் குறைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து, பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தலைமையாசிரியா் எடுத்துரைக்க வேண்டும். மேலும், தோ்வெழுத சலுகைகள் கோரும் விண்ணப்பத்தை மாணவா்களிடம் பூா்த்தி செய்து பெற்று, அதனை மருத்துவச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் இணைத்து, ஜன.13-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.