சேலம்: இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியிலிருந்து 116.22அடியாக உயர்ந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,802 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,988 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 87.56 டி.எம்.சியாக இருந்தது.