சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், கருங்குழி யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், வைகை, பல்லவன் ஆகிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளன.
பகுதிரத்து:
மதுரை-சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் (12636) விழுப்புரம்-சென்னை எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை எழும்பூா்-காரைக்குடிக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படவேண்டிய பல்லவன் விரைவு ரயில் (12605) சென்னை எழும்பூா்-விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும்.
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்:
புதுச்சேரி-புதுதில்லிக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (22403) விழுப்புரம், காட்பாடி, பெரம்பூா், கூடூா் வழியாக திருப்பிவிடப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.