சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான முதல்வரின் பதிலுரை நேரலை செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பரவும் வேகம் அதிகரித்து வருவதால், இரண்டு நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நாளை இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
கேள்வி பதில் நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கும். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மட்டும் நேரலை செய்யப்படும். பதிலளிப்பதையும் நேரலை செய்வதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் வெள்ளிக்கிழமை பதிலுரை வழங்குவார். அதனுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று கூறினார்.