புதுக்கோட்டையில் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு இரவு நேரங்களில் நாடக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலைத் தொடர்ந்து இரண்டு முறை கரோனா பொது முடக்கக் காலம் வந்ததால் ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.