விருதுநகர்: விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினரான ஏ ஆர் ஆர் சீனிவாசனுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஏ ஆர் ஆர் சீனிவாசன் உள்ளார். இவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சனிக்கிழமை விருதுநகர் திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி மற்றும் உடல் வலி இருந்ததால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர், மருத்துவர்கள் ஆலோசனைப்படி மீசலூர் அருகே உள்ள அழகாபுரியில் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.